உள்ளக, சுதேச அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற "அரச சேவையை ஊருக்கு
எடுத்துச்செல்கின்ற மக்கள் சேவை 2019 - மாத்தளை மாவட்டம்" நடமாடும் சேவைக்கு இணையாக தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமாக மாத்தளை மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்திலான நிகழ்ச்சித் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க 2019.07.12 ஆந் திகதி தம்புள்ள
பிரதேச செயலாளர் பிரிவின் சமூக அடிப்படை நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு (மகளிர் சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) விழிப்புணர்வூட்டுவதற்கான நிகழ்ச்சியொன்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது.