அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின்படி அமுலாக்கப்படுகின்ற “நாட்டுக்காக ஒன்று சேர்வோம்”
நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக நடாத்தப்படுகின்ற நான்காவது நிகழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தில் தகலறிதல் உரிமை சட்டம் சம்பந்தமான இரண்டு நிகழ்ச்சிகள் 2019.07.31 மற்றும் 2091.08.01 ஆகிய திகதிகளில் வெகுசன ஊடக அமைச்சினால் நடாத்தப்பட்டன.
கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் றுவன் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைச்சு செயலாளர் திரு. சுனில் சமரவீர மற்றும் மேலதிக செயலாளர் திருமதி ரமணீ குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் தகவலறிதல் கூறு மூலமாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் தகவலறிதல் உரிமைகள் சட்டம் சம்பந்தமாக கம்பஹா மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் பிரிவின் சமூக அடிப்படை நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் (மகளிர் அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மரண உதவிச் சங்கங்கள்) விழிப்புணர்வூட்டப்பட்டனர் .
இதற்கிணங்க 2019.07.31 ஆந் திகதி கம்பஹா பிரதேச செயலகத்தில் நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டதோடு இதற்கான வளப்பகிர்வாளராக கலைமுதுமாணி திரு. தயாஸ்ரீ நரேந்திர ராஜபக்ஷ பங்கேற்றார்.