கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டத் தொடரின் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2019.11.29ஆம் திகதி அனுராதபுரம் CTC விழா மண்டபத்தில் நடைபெற்றது. வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் AFRIEL இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக இம்மாகாணத்தைச் சார்ந்த சுமார் 400 பேருக்கு நன்மைகள் கிடைத்தன.